மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் பேரூராட்சி ஊராட்சி ஒன்றிய முன்மாதிரி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறை சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ கணிப்பு சிறப்பு முகாம் நேற்று நடந்தது. உத்திரமேரூர் பேரூராட்சி தலைவர் சசிகுமார் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் ஜெய்சங்கர் முன்னிலை வகித்தார். இதில், 1 முதல் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் பார்வை, செவித்திறன், கை, கால் இயக்கம், அறிவுத்திறன் வளர்ச்சி, ஆட்டிசம் உள்பட 26 வகை குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், தகுதி வாய்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு, அடையாள அட்டை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், உத்திரமேரூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர் ஹேமலதா ஞானசேகரன் கலந்து கொண்டு, மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கான சான்றிதழ்களை வழங்கினார். இதில், உத்திரமேரூர் வட்டத்தில் 194 குழந்தைகள் கலந்து கொண்டு, சிகிச்சை பெற்று, மாற்றுத்திறனாளி குழந்தைகளில் 20 பேர் மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டனர்….

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்