மதுரை, ஜூலை 17: விண்ணப்பித்த அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித் தொகை வழங்க வேண்டும். இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை கொடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளி நல அலுவலரை நிரந்தரமாக நியமிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் போராட்டம் நடந்தது. மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்திற்கு பொருளாளர் சக்கரவர்த்தி தலைமை வகித்தார். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.