* 10 கிராம் தங்கப்பதக்கம் மற்றும் 50 ஆயிரம் ரொக்கம் பரிசு * கலெக்டர் தகவல்திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை புரிந்ததொண்டு நிறுவனத்திற்கு 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் 50 ஆயிரம்ரொக்கப் பரிசு வழங்கப்பட உள்ளதால் சேவை புரிந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களைத் தேர்வுக் குழு மூலம் தேர்வு செய்து, அவர்களை தமிழக முதல்வரால் ஊக்குவித்து கௌரவிக்கப்படுவதால், அதனை கண்டு தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிபவர்கள் மேலும் சிறப்பாக பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் பொருட்டு, பல்வேறு விருதுகள் வருகிற ஆகஸ்டு 15 சுதந்திர தின விழா அன்று வழங்கப்படவுள்ளன.அதாவது மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், ரூ. 50,000ஃ- ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. அதே போல் மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவருக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கு மிக அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனத்திற்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த சமூகப்பணியாளர்களுக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழும், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. மேற்காணும் விருதுகளுக்கான விண்ணப்பப் படிவங்களை, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம், எண்.5, லேடி வெலிங்டன் கல்லூரி வளாகம், காமராஜர் சாலை, சென்னை – 5 அல்லது திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் விண்ணப்பம் பெற்று, பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ்களுடன் வருகிற 10.07.2022 அன்று மாலை 5.45 மணிக்குள் சம்மந்தப்பட்ட மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் அவர்களிடம் நேரிலோ அல்லது தபால் மூலமோ சமர்ப்பிக்க வேண்டுமென்று மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கேட்டுக்கொண்டார். மேலும், விண்ணப்பப் படிவங்களை https://awards.tn.gov.in என்ற வலைத்தளத்திலும் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், மேற்படி விருதுக்கான தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வுக் குழுவினரால் தெரிவு செய்யப்பட்டு, தேர்வு செய்யப்படும் விருது பெறுபவர்களுக்கு சுதந்திர தின விழா நிகழ்வில் தமிழக முதல்வர் வழங்குவார் என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்….
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை புரிந்த தொண்டு நிறுவனத்திடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு
previous post