மார்த்தாண்டம் அருகே பிளஸ் 1 மாணவி திடீர் மாயம்

 

மார்த்தாண்டம், ஜூலை 8 : மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சியை சேர்ந்த 50 வயது நபருக்கு 16 வயதில் மகள் உள்ளார். இந்த சிறுமி அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் மாணவி காலை சுமார் 10 மணியளவில் நண்பர்களுடன் வெளியே செல்வதாக கூறிவிட்டு தனது வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். ஆனால் மாலை நேரமாகியும் மாணவி வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவியை பல இடங்களில் தேடினர்.

நண்பர்கள் வீடுகளில் தேடியும் மாணவி பற்றி எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. அதற்குள் இரவு நேரமும் ஆகிவிட்டது. ஆனாலும் மகள் வீடு திரும்பாததால் அவளுக்கு என்ன நடந்தது என தெரியாமல் பெற்றோர் கதறினர். பின்னர் இது குறித்து மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவிக்கு என்ன ஆனது? எங்கு இருக்கிறார்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை