மார்த்தாண்டம், ஜூலை 2: மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு உள்பட்ட திக்குறிச்சி நம்பச்சன்விளையை சேர்ந்தவர் ஜார்ஜ் (56). சுமை தூக்கும் தொழிலாளி. இவரது மகன் அஜித் (23). தொழிலாளி. வேலைக்கு செல்லாமல் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார். வீட்டில் என்ன பிரச்னை என்று கேட்டபோது பதில் கூறாமல் இருந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அஜித் பேன் ஊக்கில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்ததும் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இதுகுறித்து மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.