மார்த்தாண்டம், செப்.30 : மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு உள்பட்ட திற்குறிச்சி இலாம்பிலாம் தோட்டத்தைச் சேர்ந்தவர் ஷஜின் (26) ஹிட்டாச்சி ஓட்டுனர். அதே பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (32). இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் ஷஜின் வீட்டில் இருந்தபோது, சதீஷ் குடிபோதையில் சென்று தகறாறில் ஈடுபட்டு அவரை தாக்கி உள்ளார். இதுகுறித்து ஷஜின் கொடுத்த புகாரின் பேரில் சதீஷ் மற்றும் அவரது மகன் அஜி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல சதீஷ் கொடுத்த புகாரில், அவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது அதே பகுதியை சேர்ந்த தங்கசாமி (48), அவரது மகன் நிஷாந்த் (28), காமராஜர்(56),அவரது மகன் ஷஜின் (26), ஆகியோர் தகராறில் ஈடுபட்டு காயப்படுத்தியதோடு அவரிடம் இருந்த மொபைல் போனையும் பறித்து சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.