மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பழநி, ஜூன் 23: பழநி மின்வாரிய திடலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் முறைகேடுகளுடன் நடைபெறும் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும். 2024ம் ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையை மாநில அரசுக்கு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் மாவட்ட செயலாளர் செல்வராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராமசாமி, அருள்செல்வன், கமலக்கண்ணன், நகர செயலாளர் கந்தசாமி, ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ், கனகு, சிவமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட குழு உறுப்பினர் பகத்சிங் நன்றி கூறினார்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை