மாரடைப்பால் சிறை கைதி சாவு

புழல்: சென்னை புழல் மத்திய சிறையில் சுமார் 1800க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இங்கு சென்னை வில்லிவாக்கம், பாபா நகரை சேர்ந்த ராம் (60) என்பவர் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம் முதல் சிறையில் இருந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு அவர் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்….

Related posts

பறவைகளை வேட்டையாடினால் 7 ஆண்டு சிறை தண்டனை : வனத்துறை எச்சரிக்கை

மூலவரை தரிசித்த சூரிய பகவான்

தூத்துக்குடி – மாலத்தீவு இடையே சரக்கு தோணி போக்குவரத்து ஓரிரு நாட்களில் துவக்கம்