மாயமாகி மீட்கப்பட்ட பிளஸ்-1 மாணவி மீண்டும் தப்பி ஓட்டம்

 

தர்மபுரி, பிப்.3: தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் மாரவாடி கிராமத்தை சேர்ந்த 17வயது சிறுமி. அதே பகுதியில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறாள். கடந்த 26ம் தேதி மாணவி வீட்டில் இருந்து வெளியே செல்வதாக கூறி சென்றாள். ஆனால் வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவளது பெற்றோர், கிருஷ்ணாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான மாaணவியை தேடிவந்தனர்.

அப்போது, மாணவி சேலம் காப்பகத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து பெற்றோர் நேற்று அங்கு சென்று, மாணவியை மீட்டு, சொந்த ஊருக்கு பஸ்சில் அழைத்துக் கொண்டு வந்து கொண்டிருந்தனர். அப்போது மாரவாடி பகுதி அருகே பஸ்சில் வந்தபோது, சிறுமி திடீரென மாயமானாள். இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, மீண்டும் மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

 

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை