மாமனாரை கத்தியால் குத்திய மருமகன் கைது

 

வருசநாடு, ஜூன் 1: வருசநாடு அருகே அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சின்னக்காளை (68). இவரது மகள் பாண்டியம்மாளுக்கும், ராயப்பன்பட்டி அருகே சின்ன ஓவுலாபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் 13 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் இருவரையும் சின்னக்காளை வருசநாட்டில் உள்ள தனது வீட்டில் வசிக்க ஏற்பாடு செய்தார். இந்நிைலையில் வருசநாட்டில் உள்ள கோயிலில் சமீபத்தில் பொங்கல் திருவிழா நடந்தது.

அப்போது திருவிழாக தேவைகளுக்காக சின்னக்காளை வைத்திருந்த பணத்தை எடுத்து மணிகண்டன் செலவு செய்து விட்டார். இதனை சின்னக்காளை கண்டித்ததால், அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம்அடைந்த மணிகண்டன் தன்னிடம் இருந்த கத்தியால் சின்னக்காளையை சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயமடைந்த அவர், தேனி அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து சின்னகாளை கொடுத்த புகாரின் பேரில் வருசநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை