மானூர் அருகே பள்ளி மாணவன் மாயம்

நெல்லை: மானூர் அருகே மாயமான பள்ளி மாணவனை பேலீசார் தேடி வருகின்றனர். மானூர் அருகேயுள்ள நல்லம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் பாலன் மகன் அஷ்வின்(13). இவர் துலுக்கர்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 7ம் வகுப்பு பயின்று வந்தார். கடந்த 22ம் தேதி வழக்கம்போல பள்ளிக்கு சென்ற மாணவன் அஷ்வின் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவர் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தாய் விஜயா அளித்த புகாரின் பேரில் மானூர் இன்ஸ்பெக்டர் சபாபதி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவனை தேடி வருகின்றனர்.

Related posts

நெற்பயிர், மா, வாழை மரங்களை துவம்சம் செய்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து செல்லும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

இபிஎப்ஓ பி.ஏ., இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி எழுத்து தேர்வு