மானூர் அருகே தெற்கு வாகைகுளம் ஆனைமலை அய்யனார் சாஸ்தா கோயிலில் வருஷாபிஷேகம்

விகேபுரம், ஜூன் 28: மானூர் அருகேயுள்ள அழகியபாண்டிபுரம் தெற்கு வாகைகுளம் குளக்கரையில் ஸ்ரீபூர்ணா, ஸ்ரீபுஷ்கலா சமேத ஸ்ரீஆனைமலை அய்யனார் சாஸ்தா கோயில் உள்ளது. இக்கோயிலில் 11வது வருஷாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடந்தது. காலை 10 மணிக்கு கணபதி ஹோமம், சாஸ்தா ஹோமம், பூர்ணாகுதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. மதியம் அன்னதானம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாஸ்தாவை தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Related posts

சீர் மரபினர் நல வாரியம் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளையில் மின்னொளி கைப்பந்து போட்டி