மானூர் அருகே காற்றாலையில் ரூ.1 லட்சம் காப்பர் வயர்கள் திருட்டு

மானூர், மார்ச் 5: மானூர் அருகே செழியநல்லூரிலுள்ள தனியார் காற்றாலையில் ராமையன்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன்(39) என்பவர் பொறுப்பாளராக வேலை செய்து வருகிறார். இந்த காற்றாலையில் கடந்த 29ம் தேதியன்று ஒரு டன் எடையுள்ள காப்பர் வயர்களும் 500லிட்டர் டிரான்ஸ்பார்மர் ஆயிலும் என ஒரு லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு போயிருப்பதாக மாரியப்பன், மானூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் எஸ்.ஐ ரபினாமரியம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை