மாந்திரீகர் கொலை வழக்கில் மேலும் 3 பேர் அதிரடி கைது

சேலம்:சேலம் அருகே மாந்திரீகர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர். சேலத்தை அடுத்துள்ள மல்லூர் வாழகுட்டப்பட்டி எருமநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ஜக்கமநாயக்கர் மகன் முத்துராஜ் (39), மாந்திரீகர். இவரை கடந்த 26ம் தேதி இரவு மர்மநபர்கள் அடித்துக்கொலை செய்தனர். இதுபற்றி மல்லூர் இன்ஸ்பெக்டர் கலையரசி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகள் குறித்து விசாரித்தனர். அதில், இக்கொலையில் அதே ஊரைச்சேர்ந்த முத்தியால் மகன் ஜெயக்குமார் (37) மற்றும் அவரது கூட்டாளிகள் 6 ேபர் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து, ஜெயக்குமார் மற்றும் கூட்டாளிகளான மல்லூர் வேங்காம்பட்டியை சேர்ந்த பூவரசன் (30), ராஜா (28), கணேசன் (53) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடந்த விசாரணையில், ஜெயக்குமாரிடம் தொடர்ந்து மோதல் போக்கு கொண்டிருந்தாலும், அவரது அக்காவுடன் தகாத உறவு வைத்துக்கொண்டு சொத்தை பிரித்து வரக்கூறியதாலும் முத்துராஜை தீர்த்துக்கட்டியது தெரிந்தது. இதையடுத்து கைதான ஜெயக்குமார் உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை