மாநில சிலம்ப போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவர்

 

தேவகோட்டை, பிப்.6: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தேவகோட்டை கிளை அலுவலகத்தில் மாநில அளவிலான சில ம்ப ஒற்றைக்கம்பு சுழற்சி விளையாட்டு போட்டி நடந்தது. இதில் தங்கம் வென்ற மாணவர் அப்துல் பாசித் என்ற மாணவருக்கு பாராட்டி விழா நடைபெற்றது. தமுமுக நகர தலைவர் அன்சர் அலி தலைமையில் தமுமுக மாநில செயலாளர் சாதிக் பாட்சா பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பிரதிநிதி மண்டல ஜெய்லாவுதீன், மாநில தொண்டரணி செயலாளர் ஃபர்கி, மாவட்ட செயலாளர் முத்தலிபு, பொருளாளர் முகமது அன்சாரி,நகர பொருளாளர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் மாவட்ட வட்ட அளவில் நடைபெற்ற சிலம்பு விளையாட்டுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம் பரிசு வழங்கினர்.

 

Related posts

திரவுபதியம்மன் கோயிலுக்கு சொந்தமான ₹35 லட்சம் மதிப்புள்ள வீடு மீட்பு அறநிலையதுறை அதிகாரிகள் சீல் வைத்தனர் வேலூர் வேலப்பாடியில் நீதிமன்ற உத்தரவின்பேரில்

வரத்து அதிகரிப்பால் பீன்ஸ் விலையில் சரிவு வேலூர் நேதாஜி மார்க்கெட்டில்

ஐஎப்எஸ் நிதிநிறுவன ஏஜென்ட் தூக்கிட்டு தற்கொலை வேலூரில் நிதி நிறுவன மோசடியால் விரக்தி