மாநில அளவிலான பிக்கில் பால் போட்டி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட பிக்கில் பால் சங்கம், பாரூக் சில்க் டிரேடர்ஸ் இணைந்து 2வது மாநில அளவிலான பிக்கில் பால் போட்டிகள் காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கை பாரூக் பிளட் லைட் டென்னிஸ் மைதானத்தில் நடந்தது. இதில்  சென்னை, புதுச்சேரி, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இதில் ஆண்கள், பெண்கள் தனித்தனி ஒற்றையர் பிரிவு, இரட்டையர் பிரிவு, ஆண்கள், பெண்கள் இணைந்து விளையாடிய கலப்பு இரட்டையர் பிரிவு போன்ற பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. புதுச்சேரி மாநிலம் மற்றும் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பரிசுகளை பெற்றனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பிக்கில்பால் சங்க மாநில தலைவர் புருஷோத்தமன், செயலாளர் மோஹித், பொருளாளர் யோகேஷ், நீச்சல் பயிற்சியாளர் ஆனந்த் ஆகியோர் கலந்துகொண்டனர். போட்டி ஏற்பாடுகளை மாவட்ட பிக்கில் பால் சங்கத் தலைவர் குணாளன், செயலாளர்  அசோக், பொருளாளர் பாரூக், துணைச்செயலாளற் சங்கர் ஆகியோர் செய்தனர்….

Related posts

திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடியில் நாளை முதல் உள்ளூர் வாகனத்துக்கு முழு கட்டண விலக்கு கிடையாது

விழுப்புரம் மாவட்டத்தில் 21 சமூக நீதி போராளிகளுக்கு ரூ.5.7 கோடியில் நினைவு மண்டபம் கட்டப்பட்டு வருகிறது: தமிழ்நாடு அரசு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 3 பேரை ஜூலை 19 வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவு