கருங்கல், ஆக. 10: கருங்கல் அருகே சூசைபுரம் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள யூபி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நடந்த மாநில அளவிலான கைப்பந்துப் போட்டியில் பங்கேற்றனர். இந்த போட்டியில் அல்போன்சா கல்லூரி மாணவிகள் தமிழக அளவில் 4வது இடத்தைப் பெற்றனர். கல்லூரிக்கு பெருமை சேர்த்த வீராங்கனைகளுக்கு கல்லூரி மேலாளரும், தக்கலை மறை மாவட்ட குருகுல முதல்வருமான பேரருட்தந்தை தோமஸ் பவ்வத்து பறம்பில் வெற்றிச் சான்றிதழை வழங்கி வாழ்த்தினார். மேலும் கல்லூரி தாளாளர் மற்றும் செயலர் பேரருட்தந்தை ஆன்றனி ஜோஸ், முதல்வர் முனைவர் மைக்கேல் ஆரோக்கியசாமி எஸ்டிபி, துணை முதல்வர் சிவனேசன், உடற்கல்வி இயக்குனர்கள் சீலன், துணை இயக்குனர் அனிஷா ஆகியோர் வெற்றி பெற்ற மாணவிகளை பாராட்டினர்.