கோவை, ஆக. 24: கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம் வரும் 31-ம்தேதி (வியாழன்) காலை 10.30 மணிக்கு மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் நடக்கிறது. மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமை தாங்குகிறார். மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப், துணை மேயர் வெற்றிசெல்வன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இக்கூட்டத்தில், மாநகராட்சி வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. மேற்கண்ட தகவலை மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் தெரிவித்தார்.