Monday, September 30, 2024
Home » மாதாந்திர உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் நலிந்த கலைஞர்கள் 1000 பேருக்கு நிதி உதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

மாதாந்திர உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் நலிந்த கலைஞர்கள் 1000 பேருக்கு நிதி உதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

by kannappan

சென்னை: நலிந்த நிலையில் வாழும்  கலைஞர்களுக்கு மாதாந்திர நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ்,  1000 கலைஞர்களுக்கு நிதி உதவி வழங்கும் அடையாளமாக 11 கலைஞர்களுக்கு  நிதி ஒப்பளிப்பு  ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில்  வழங்கினார். இதன்மூலம், தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டு துறையின்  தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வாயிலாக பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் வாழும் சிறந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர நிதி உதவி திட்டத்தின் கீழ், 2018-2019 மற்றும் 2019-2020 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கு தலா 500 நலிந்த கலைஞர்கள் வீதம் மொத்தம் 1000 நலிந்த கலைஞர்கள் பயனடைவார்கள். மேலும், நலிந்த கலைஞர்களுக்கு  வழங்கப்பட்டு வரும் மாதாந்திர நிதியுதவியை ₹2000த்தில் இருந்து ₹3000ஆக உயர்த்தி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் உள்ள 6600 அகவை முதிர்ந்த செவ்வியல் மற்றும் கிராமிய கலைஞர்கள் பயன்பெறுவார்கள். இந்த நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்….

You may also like

Leave a Comment

18 + 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi