மாணவிக்கு பாலியல் தொல்லை மதபோதகர் போக்சோவில் கைது

 

ஓசூர், ஏப்.29: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே மத்திகிரி ராயல் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் மேவால்ட்(57), மத போதகர். அதே பகுதியில், பிளஸ் 2 முடித்து விட்டு, நீட் தேர்விற்கு தயாராகி வந்த 17 வயதான நேபாள நாட்டு மாணவிக்கு, மேவால்ட் பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த மாணவி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுமத்தில் புகார் செய்தார். அதன்பேரில், ஓசூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், மேவால்ட் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து மதபோதகர் மேவால்ட்டை போலீசார் கைது செய்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை