மாணவிக்கு பாலியல் தொல்லை

 

தர்மபுரி, அக்.27: தர்மபுரி மாவட்டம், சோளக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமை, மாணவி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த விஜய்(21) என்பவர், மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி சத்தம் போட்டதால், அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். இதனை கண்டு விஜய் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதுபற்றி மாணவியின் தாய், தர்மபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து, தலைமறைவாக உள்ள விஜயை தேடி வருகின்றனர்.

Related posts

மீஞ்சூர் அருகே ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை

பெருவாயில் பகுதியில் புதிய அங்கன்வாடி கட்டிடம்: எம்எல்ஏ திறந்து வைத்தார்

தாமரைக்குப்பம் கால்வாய் மதகு சீரமைக்கும் பணி தொடக்கம்