மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் ஜிம் கோச்சர் கைது

பெரம்பூர்: சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க நபர், கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதில், தனது 16 வயது மகள் 12ம்வகுப்பு படித்து வருகிறார். தினமும் டியூஷன் செல்லும்போது கொடுங்கையூர் ஆர்.வி.நகர் 1வது தெருவை சேர்ந்த உமா சங்கர் (32) என்பவர் தொடர்ந்து மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இந்த புகார் மனு எம்கேபி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு  மாற்றப்பட்டது. மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரித்தனர். இதில் ஜிம் கோச்சராக இருக்கும் உமா சங்கர், பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும், திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ்  உமாசங்கரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்