மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

எட்டயபுரம் மார்ச்16: படர்ந்தபுளி, ராமனூத்து ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு முகாம் நடந்தது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதனடிப்படையில் படர்ந்தபுளியில் விளாத்திகுளம் வட்டார கல்வி அலுவலர் அன்னபூரணம் தலைமையில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது. படர்ந்தபுளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் வையம்மாள், ஆசிரியர்கள் ஆழ்வார், ஜெயலட்சுமி, அங்கன்வாடி பணியாளர் செல்வவடிவு, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் கலா உட்பட மாணவர்கள் கலந்து கொண்டனர். அதேபோல் ராமனூத்து ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இப்ராஹிம் தலைமையில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது. ஆசிரியர் இந்திரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை