மாணவர்களுக்கு ஓவியப்போட்டி

தர்மபுரி, செப்.28: பிஎஸ்என்எல் தினத்தை முன்னிட்டு, தர்மபுரி பிஎஸ்என்எல் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ஓவிய போட்டி நேற்று தர்மபுரியில் நடந்தது. பிஎஸ்என்எல் நிறுவனம், நாடு முழுவதும் குழந்தைகளுக்கான ஓவியப் போட்டியை நடத்தி வருகிறது. தர்மபுரி பிஎஸ்என்எல் சார்பில், நேற்று வாரியார் பள்ளியில் ஓவிய போட்டி நடந்தது. ஓவிய போட்டியை, சேலம் பிஎஸ்என்எல் பொது மேலாளர் சுபா தலைமை வகித்து துவக்கி வைத்து, கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பங்களிப்பு சான்றிதழ்களை வழங்கினார். இதில் 5 முதல் 10 வயது வரை 75க்கும் மேற்பட்ட மாணவ, மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் துணை பொது மேலாளர் பிரபுதுரை, உதவி பொது மேலாளர்கள் மஞ்சுநாத், அனிதா, சேகர், உதவி கோட்ட பொறியாளர் கிஷோர் குமார், பள்ளி தாளாளர் தணிகைவேல், இளநிலை தொலைத்தொடர்பு அலுவலர்கள் ராஜேஷ், குமார், ஸ்ரீதர், அன்பழகன், கார்த்திக், பள்ளி ஆசிரியர்கள் சரவணன், பூபதி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பிஎஸ்என்எல் பைபர் முகவர் ஜெயவேல், ஆதிஷ் ராஜ் செய்திருந்தனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை