மாடு முட்டி சிறுவன் காயம்

பூந்தமல்லி: மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் ஆண்டாள்நகர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் ரோகேஷ் சாய்(5), நேற்று வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக வந்த மாடு அவனை முட்டி தள்ளியது. இதில் சிறுவன் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்ததில் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் சிறுவனை மீட்டு எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுவன் சிகிச்சை பெற்று வருகிறான். இதுகுறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். …

Related posts

இஸ்லாமியர்கள் பற்றி அவதூறாக பதிவிட்ட பாஜக பிரமுகருக்கு நிபந்தனை முன்ஜாமீன்

முண்டந்துறை வனப்பகுதியில் சாலை அமைக்காதது ஏன்? : ஐகோர்ட்

இளைஞர்களை தாக்கிய வழக்கில் பாடகர் மனோவின் மகன்கள் 2 பேருக்கு நிபந்தனை முன்ஜாமின்!