மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு போட தடை கோரி வழக்கு..: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு…!

சென்னை : மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு போடுவதை அனுமதிக்கும் மிருகவதை தடைச் சட்டப்பிரிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாடுகளை கட்டுப்படுத்த அதன் மூக்கில் துளையிட்டு மூக்கணாங்கயிறு போட அனுமதிக்கும் மிருகவதை தடை சட்டப்பிரிவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்து வந்த நிலையில், மூக்கணாங்கயிறு போடப்படுவதால் மாடுகள் துன்புறுத்தப்படுவதாகவும் அதற்கு அனுமதிக்கும் மிருகவதை தடைச் சட்டப்பிரிவை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது நீதிபதிகள், உலகளவில் மாடுகளை கட்டுப்படுத்த இந்த நடைமுறைதான் பின்பற்றப்படுவதாகவும் இது தொடர்பாக புதிய விதிகளை வகுத்து உலகத்தை பின்பற்ற செய்வோம் என்றும் தெரிவித்தனர்.அத்துடன் இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் 4 வாரங்களில் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை 8 வாரத்திற்கு தள்ளிவைத்தனர்….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை