திருத்தணி: திருத்தணி அடுத்த டி.புதுார் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன்(52). இவர் கடந்த 6ம் தேதி ஊரில் நடந்த திருவிழாவில் பங்கேற்றார். பின்னர் இரவு மது குடித்துவிட்டு, வீட்டின் மாடிபடியில் ஏறிச்செல்ல முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக கால்தவறி தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ேநற்று பரிதாபமாக உயிரிழந்தார். …