மாடியிலிருந்து தவறி விழுந்த மெக்கானிக் பலி

புழல்: வேப்பம்பட்டு குரோத் நகரை சேர்ந்தவர் சிவப்பிரகாசம்(42). ஏசி மெக்கானிக்.   இவர் நேற்று முன்தினம் புழல் அடுத்த பத்மாவதி நகரில், ஒரு வீட்டின் மாடியில், ஏணியில் நின்றவாறு ஏசியை பழுது பார்த்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக, தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில்  அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அதிகாலை உயிரிழந்தார்….

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்

திருச்சியில் வாலிபர் வெட்டி கொலை தப்பிய ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ்