மாஜி அமைச்சர் கொலையில் சம்பந்தப்பட்டவர் கோர்ட்டில் கையெழுத்திட்டு திரும்பிய ரவுடி வெட்டிக் கொலை: 5 பேர் கும்பல் வெறிச்செயல்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு திரும்பிய ரவுடியை 5 பேர் கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்தது. திருச்சி பொன்மலையை சேர்ந்தவர் இளவரசன் (30). ரவுடியான இவர் மீது, புதுச்சேரி முன்னாள் அமைச்சர் வி.எம்.சி.சிவகுமார் கொலை மற்றும் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன. புதுக்கோட்டையில் நடந்த கொலை வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த இளவரசனுக்கு, கடந்த சில நாட்களுக்கு முன்பு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இதனால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இளவரசன் நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ளார். அதன்படி புதுக்கோட்டை நீதிமன்றத்திற்கு நேற்று காலை 10.30 மணியளவில் இளவரசன், தனது மெக்கானிக் மற்றும் நண்பர்கள் 3 பேருடன் 3 பைக்குகளில் வந்துள்ளார்.  நீதிமன்றத்தில் கையெழுத்து போட்டு விட்டு திருச்சிக்கு திரும்பி கொண்டிருந்தனர். புதுக்கோட்டை புதுக்குளம் கரையோரம் வந்தபோது, பின்னால் 3 பைக்குகளில் வந்த 5 பேர் கும்பல், இளவரசன் வந்த பைக்கை வழிமறித்து அவரது தலையில் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். 5 பேரும் முகத்தை கைக்குட்டையால் மறைத்து கட்டியிருந்தனர். அவர்களை பார்த்ததும் மற்ற 4 பேரும் தப்பியோடினர். ரத்த வெள்ளத்தில் சாய்ந்த இளவரசனின் தலையில் மீண்டும், மீண்டும் வெட்டிவிட்டு அந்த கும்பல் தப்பினர். இது குறித்து புதுக்கோட்டை கணேஷ்நகர் போலீசார் வழக்கு பதிந்து கும்பலை தேடி வருகின்றனர்.* 19 வழக்குகள் நிலுவைகொலையான பொன்மலை இளவரசன் மீது திருச்சி மாநகரில் மட்டும் 15 வழக்கு, புதுக்கோட்டையில் 2 வழக்கு, புதுச்சேரி, காரைக்காலில் தலா ஒரு வழக்கு என மொத்தம் 19 வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்….

Related posts

மேட்ரிமோனியல் மூலம் டிஎஸ்பி, பைனான்சியர் உள்பட 50 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி சிக்கியது எப்படி?: பரபரப்பு தகவல்கள்

பேரனுக்கு பதிலாக நடந்த மூதாட்டி கொலை வழக்கில் உறவுக்கார பெண் சிக்கினார்

இளம்பெண்ணை காதல் வலையில் வீழ்த்தி ஊர், ஊராக அழைத்துச் சென்று சித்ரவதை: ஜம்முவில் வாலிபர் கைது