மழை பெய்ய வேண்டி முதலூரில் சிறப்பு பிரார்த்தனை

சாத்தான்குளம், ஆக.29: மழை பெய்ய வேண்டி முதலூரில் கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். சாத்தான்குளம் பகுதியில் நடப்பு ஆண்டு எதிர்பார்த்த மழை பெய்யாமல் சுட்டெரிக்கும் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் குளம், கிணறுகளில் நீர் இருப்பு குறைந்து வருகிறது. பல இடங்களில் குடிநீர் வழங்குவதும் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே, பலர் மழை வேண்டி சிறப்பு பூஜை மற்றும் பிரார்த்தனைகள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரில் வறண்டு காணப்படும் ஊரணியில் கிறிஸ்தவர்கள் சார்பில் வட்டார பகுதிகளுக்கு மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. ஊரணியில் பொதுமக்கள் அனைவரும் கூடி சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். இதில் முதலூர்தூய மிகாவேல் ஆலய குருவானவர் செல்வ மகாராஜா மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை