ஊட்டி : நீலகிரி மாவட்ட மக்களின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் சக்தியாக சுற்றுலா மற்றும் தேயிலை விளங்கி வருகிறது. சுமார் 55 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தேயிலை விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு அடுத்தப்படியாக கேரட், உருளைகிழங்கு, பீன்ஸ், முட்டைகோஸ் போன்ற மலைகாய்கறிகள் அதிகளவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விளைவிக்கப்படுகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நல்ல மழை பெய்தது. ஊட்டி, குந்தா, கூடலூர் தாலுக்காகளுக்கு உட்பட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. மழை காரணமாக தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது.கூட்டுறவு மற்றும் தனியார் தேயிலை தொழிற்சாலைகளுக்கு பசுந்தேயிலை வரத்து அதிகரித்துள்ளது. ஆனால் நடப்பு மாதத்திற்கான பசுந்தேயிைல விலை ரூ.14.74 ஆக உள்ளது. தனியார் தொழிற்சாலைகளில் தரமான பசுந்தேயிலை மட்டுமே வாங்கப்படுகிறது. இந்நிலையில் தேயிலை மகசூல் அதிகரித்தும் அவற்றை பறிக்க போதுமான ஆட்கள் கிடைப்பதில்லை. தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்குச் சென்று வந்த தொழிலாளர்கள் தற்போது அதிக ஊதியம் கிடைக்கும் கட்டுமான வேலை மற்றும் காய்கறி தோட்டங்களுக்கு ேவலைக்கு செல்கின்றனர். போதிய ஆட்கள் கிடைக்காததால் பசுமையான இலைகள் தேயிலை செடிகளிலேயே வீணாக கூடிய சூழல் உள்ளது. இதனால் மகசூல் அதிகரித்தும், இலை பறிக்க முடியாமல் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்….