மழையால் சேதமடைந்த சம்பா பயிர்களை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் விவசாயிகள் விளைவித்த நெல் உள்ளிட்ட சம்பா பயிர்கள் மழையால் வீணாகி விட்டது மிகவும் கவலைக்குரியது. டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையில் மூழ்கி வீணாகிவிட்டது. இதனால் விவசாயிகள் வேதனைக்குள்ளாகியுள்ளனர்.ஏற்கனவே குறுவை சாகுபடியும் பாதிப்படைந்து பெருத்த நஷ்டத்தில் இருக்கும் விவசாயிகளுக்கு சம்பா சாகுபடியும் நஷ்டத்தை கொடுத்தால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள். தொடர்ந்து விவசாயம் செய்வதற்கு பொருளாதாரம் இருக்காது. ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கூடுதல் இட வசதி செய்து தர வேண்டும். நெல் மூட்டைகளைப் பாதுகாக்க தேவையான உபகரணங்கள் இருப்பில் இருக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்திருப்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.எனவே தமிழக அரசு, தமிழகம் முழுவதும் மழையால் சேதமடைந்துள்ள சம்பா பயிர்களை ஆய்வு செய்து, நிவாரணத் தொகை வழங்கவும், நெல் சேமிப்பு கிடங்குகளில் நெல்லை கொள்முதல் செய்யும் வரை நெல் மூட்டைகளை முறையாக தார்ப்பாய் போர்த்தி பாதுகாக்கவும், நெல்லுக்கு உரிய விலை உடனடியாக கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்….

Related posts

சென்னையில் 17 வழித்தடங்கள் மூலம் விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலம்:  கட்டுப்பாடுகளை மீறினால் கைது  காவல்துறை எச்சரிக்கை

அடையாறு பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம் : காவல் துறை அறிவிப்பு

தி.நகர் காவல் மாவட்டத்தில் போதை தடுப்பு நடவடிக்கை கஞ்சா விற்ற 30 பேர் கைது