சென்னை: மழைநீர் வடிகால்வாய் பள்ளத்தில் விழுந்து தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். புளியங்குடியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன்(24). இவர் தரமணி அருகே உள்ள கந்தன்சாவடியில் தங்கி, ஈக்காட்டுதாங்கல் பகுதியில் உள்ள டிவி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீட்டிற்கு செல்வதற்கு முன்பு காசி திரையரங்கம் அருகே உள்ள கடை ஒன்றில் ஜூஸ் குடிக்க தனது பைக்கில் சென்றார். அப்போது சாலையோரம் மழைநீர் வடிகால்வாய் பணிக்காக தோண்டப்பட்ட கட்டுமான பள்ளத்தில் எதிர்பாராத விதமாக பைக்குடன் விழுந்து படுகாயமடைந்தார். அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்ந்தனர். மேல் சிகிச்சைக்காக பின்னர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு முத்துகிருஷ்ணன் நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், முத்துகிருஷ்ணனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ஊடகத் துறை நண்பர்களுக்கு்ம் ஆறுதல் தெரிவித்தார். மேலும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சமும், பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதித்திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சமும், சேர்த்து உயிரிழந்த முத்துகிருஷ்ணன் குடும்பத்தாருக்கு ரூ. 5 லட்சம் வழங்க உத்தரவிட்டார்….