சென்னை: மழைநீர் தேங்கும் இடங்களில் உடனுக்குடன் மோட்டார்கள் மூலம் நீர் அகற்றப்படுவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். பேரிடர் கால அவசர கட்டுப்பாடு மையத்தில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் எங்கும் மழைநீர் தேங்கவில்லை, தேங்கிய சில இடங்களிலும் மழை நீர் உடனடியாக அகற்றப்பட்டது. எங்கேயாவது தவறு நடந்தால் அனைத்தையும் குறைசொல்வது சரியல்ல. தகுந்த முன்னெச்சரிக்கையுடன் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன என கூறினார். …