மல்லசமுத்திரம், அக்.8: மல்லசமுத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று காலை கடும் வெயில் வாட்டி எடுத்தது. மே மாதம் போல், காலை 9 மணிக்கே வெயிலின் தாக்கம் இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சென்றனர். பின்னர், மாலை 4 மணியளவில், கருமேகங்கள் திரண்டு சாரல் மழை பெய்தது. தொடர்ந்து கனமழை பெய்தது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டியது. இதனால், மல்லசமுத்திரம், காளிப்பட்டி, அக்கரைப்பட்டி, பொரசல்பட்டி பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையின் காரணமாக வெயிலின் தாக்கம் தணிந்து, குளிர் காற்று வீசியது.