கோழிக்கோடு: கேரளாவை சேர்ந்த மலையாள நடிகை சாரதா (84), கோழிக்கோட்டில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக கோழிக்கோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு மலையாள திரையுலகினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்தனர். நாடகங்களில் நடித்துவிட்டு சினிமாவுக்கு வந்த சாரதா, 1979ல் வெளியான அன்காகுரி என்ற படத்தில் முதன்முதலில் நடித்தார். தொடர்ந்து அனுதம், நல்கவாலா, அந்நிய தேசம், சதயம், சல்லபம், சூளைமாங்கா, தாயின் கூடு உள்பட 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்ததுடன், ஏராளமான டி.வி தொடர்களிலும் நடித்துள்ளார்….