மலேசிய துணை முதல்வர் வெள்ளகோவில் வருகை: உறவினர்களை சந்தித்து நலம் விசாரிப்பு

திருப்பூர்: மலேசியா நாட்டின் பினாங்கு மாநில துணை முதல்வரான ராமசாமி அவரது சொந்த ஊரான திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவிலுக்கு வருகை புரிந்தார். திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே உள்ள மூத்தநாயக்கன்வலசை சேர்ந்தவர் ராமசாமி. 73 வயதான இவர் சிறு வயதிலேயே மலேசியா நாட்டிற்கு சென்றார். அங்கு குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் மலேசியா நாட்டில் உள்ள பினாங்கு மாநில ஜனநாயக செயல் கட்சியின் துணை பொதுசெயலாளராகவும், அம்மாநில துணை முதல்வராகவும் இருந்து வருகிறார். இவர் நேற்று மாலை அவரது சொந்த ஊரான வெள்ளகோவில், மூத்தநாயக்கன்வலசு பகுதிக்கு வந்தார். பின் அங்குள்ள அவரது உறவினர்களை சந்தித்து நலம் விசாரித்து அங்கிருந்து புறப்பட்டு கோவை சென்றார். …

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்