மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 69% இடஒதுக்கீடு தொடர்பாக ஒன்றிய அரசு விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: எம்பிபிஎஸ், எம்டிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து குழு அமைத்து முடிவெடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி திமுக தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பேனர்ஜி முன்பு நடைபெற்று வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கர நாராயணன் உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் குழு அமைக்கப்பட்டு அதன் பரிந்துரையின் அடிப்படையில் மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.இதில் நீதிமன்ற அவமதிப்பு ஏதும் செய்யவில்லை என்றும் மறுப்பு தெரிவித்தார். ஆனால் தமிழக அரசின் 69 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்படவில்லை. முழுமையாக உயர்நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்படவில்லை என்று கூறி திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு மொத்த இடஒதுக்கீடான 50%க்குள் வருகிறதா? இல்லையா என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மத்திய அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிப்பதற்கு கால அவகாசம் கோரியதால் இந்த வழக்கை வருகின்ற திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது….

Related posts

தொழில்முனைவோர் – யூடியூப் சேனலை எவ்வாறு உருவாக்குதல், பொருட்களை சந்தைப்படுத்தல் தொடர்பான பயிற்சி

சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தின் மொத்த திட்ட மதிப்பீட்டில் 65% நிதியை ஒன்றிய அரசே ஏற்கும் : ஒன்றிய அரசு திடீர் அறிவிப்பு

மதுராந்தகம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல்