மரத்தில் கார் மோதி வாலிபர் பலி: 3 பேர் படுகாயம்

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே தாறுமாறாக ஓடிய கார், சாலையோர மரத்தில் மோதி, வாலிபர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். உடன் வந்த, 3 பேர் படுகாயமடைந்தனர். திருவாரூரில் இருந்து சென்னை நோக்கி 4 பேர், ஒரு காரில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டனர். நேற்று அதிகாலையில் மதுராந்தகம் அடுத்த படாளம் அருகே கார் வந்தது. அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார், சாலையோர மரத்தில் மோதி நொறுங்கியது. காரில் பயணம் செய்த திருவாரூர் அடுத்த விக்கிரவாண்டிபுரத்தை சேர்ந்த கலைமணி (22) சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து படாளம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை பிரேத பரிசோதனைக்காகவும், படுகாயமடைந்த 3 பேரை சிகிச்சைக்காகவும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். …

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்