கிருஷ்ணகிரி, ஜூன் 18: உத்தனப்பள்ளி தியாகதுர்க்கம் கிராம நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன் மற்றும் வருவாய்த்துறையினர், தியாகதுர்க்கம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்த ஒரு வேப்பமரம், 2 புளியமரங்களை 3பேர் வெட்டி அதனை டெம்போவில் ஏற்றி கடத்த முயன்றனர். அதிகாரிகளை கண்டதும் 3 பேரும் தப்பியோடி விட்டனர். பின்னர் டெம்போவை பறிமுதல் செய்து உத்தனப்பள்ளி போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கையில், மரங்களை வெட்டியது சூளகிரி அனுமந்தபுரம் பகுதியை சேர்ந்த முனியப்பா(45), கெலமங்கலம் சீனிவாசன்(40), கெலமங்கலம் சுல்தான்பேட்டை முருகேஷ்(45) என்பது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
மரங்களை வெட்டி கடத்த முயன்ற 3 பேருக்கு வலை
previous post