மரக்காணம் அருகே விஷ சாராயம் குடித்து சிகிச்சை பெற்ற மீனவர் பலி

மரக்காணம், ஜூலை 26: மரக்காணம் அருகே விஷ சாராயம் குடித்து மீனவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியர்குப்பம் கடற்கரையோரம் கடந்த மே மாதம் 13ம் தேதி விற்கப்பட்ட விஷ சாராயத்தை குடித்து 14 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இவர்கள் வீடு திரும்பினாலும் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வந்தனர்.

இந்நிலையில் எக்கியர்குப்பம் மீனவர் பகுதியை சேர்ந்த முத்து (59) என்பவருக்கு சம்பத்தன்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனைப் பார்த்த அவரது உறவினர்கள் மரக்காணம் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் மரக்காணம் போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள், மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய கோரி ரயில்வே தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக பவள விழாவை முன்னிட்டு கால்பந்தாட்ட போட்டிகள்: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

திருவொற்றியூர் 13வது வார்டில் இ-சேவை மையம் இடமாற்றத்தால் 3 கி.மீ அலையும் பொதுமக்கள்