மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் மேதா தட்சிணாமூர்த்தி கோயிலில் அமுது படையல் விழா

மயிலாடுதுறை, மே10: மயிலாடுதுறை அடுத்த மன்னம்பந்தலில் உள்ள மேதா தட்சிணாமூர்த்தி கோயிலில் அமுது படையல் விழா நேற்று நடந்தது. இதையொட்டி உத்தராபதீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. இதைதொடர்ந்து சுவாமி பாதத்தில் அமுது படையல் வைத்து படைக்கப்பட்டது. விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து அமுது படையலிட்ட உணவை வாங்கி சாப்பிட்டனர். இதேபோல் மயிலாடுதுறை புதுத்தெரு ருத்ராபதி கோயிலில் அமுது படையல் விழா நடந்தது. பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்து சுவாமிக்கு ஆராதனை செய்தனர். பின்னர் அமுது படையல் விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Related posts

சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்: 5 பேர் மீது வழக்கு

சவுக்கை செடிகளை பிடுங்கிய 4 பேர் மீது வழக்கு பதிவு

கணவன் மாயம்: மனைவி புகார்