மனைவியை கோடாரியால் வெட்டிய கணவருக்கு வலை

சோழவந்தான், மே 20: சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (55). கூலித்தொழிலாளியான இவர், சொத்து பிரச்னை காரணமாக அடிக்கடி குடிபோதையில் வந்து மனைவி அங்கையற்கண்ணி (45) உடன் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவர்களுக்கிடையே நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஆறுமுகம், மனைவியை கோடாரியால் வெட்டியுள்ளார். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த அங்கையற்கண்ணி, சோழவந்தான் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து