வண்ணாரப்பேட்டை: மனுதர்ம நூலை தடை விதிக்க வலியுறுத்தி, பெரியார் திராவிட கழகம் சார்பில், மாவட்ட செயலாளர் குமரன் தலைமையில், அக்கட்சியினர் சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்த ஜோதியிடம் நேற்று மனு அளித்தனர். பின்னர், குமரன் செய்தியாளரிடம் கூறியதாவது: மனுதர்ம நூலில் 8வது அத்தியாயம் 415வது ஸ்லோகத்தில் சூத்திரர்களை 7 வகையான வார்த்தைகளில் இழிவுபடுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ளது. இந்த மனுதர்ம நூலை 1927ம் ஆண்டு அம்பேத்கர் எரித்துள்ளார். தந்தை பெரியாரும் இந்த நூலை பலமுறை எரித்துள்ளார். தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோரை இழிவுபடுத்தும் இந்த மனுதர்ம நூலை தடை செய்ய வேண்டும்.இவ்வாறு கூறினார். …