கண்டமங்கலம்,செப்.13: கண்டமங்கலம் ஒன்றியம் எம்.என்.குப்பம் ஓம்சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் அலெக்சாண்டர் (50). சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். கடந்த 5ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர். அதன் பிறகு வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்களின் வீடுகள் என எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது மனைவி அந்தோணியம்மாள், கண்டமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.