மநீம தலைமை நிலைய செயலாளர் சரத்பாபு கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார்

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் சரத்பாபு கட்சியில் இருந்து விலகி நேற்று  பாஜவில் சேர்ந்தார். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மீது குற்றம்சாட்டி கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் விலகி வருகின்றனர். கட்சியின் துணை தலைவராக இருந்த மகேந்திரன், சுற்றுச்சூழல் அணி நிர்வாகி பத்மபிரியா, தலைமை நிலைய பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபு ஆகியோர் கட்சியில் இருந்து வெளியேறினர்.  அதைத் தொடர்ந்து கட்சியின் தலைமை நிலையச் செயலாளராக இருந்த சரத்பாபு என்பவரும் நேற்று கட்சியில் இருந்து விலகினார். இதையடுத்து அவர் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜ மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நேற்று பாஜவில் சேர்ந்தார்….

Related posts

ஆடி அமாவாசை, வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை, நாளை மறுநாள் சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து கழகம் தகவல்

பிளேடால் நண்பரை கிழித்துவிட்டு கழுத்தை அறுத்துக்கொண்ட வாலிபர்: போலீஸ் விசாரணையில் பரபரப்பு

நிலைய நுழைவு, வெளியேறும் பகுதியில் ஒருங்கிணைந்த நிலப்பரப்பு மேம்பாட்டுக்கு திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம்: மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்