சென்னை: மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு தரவேண்டிய 796 மெகாவாட் மின்சாரம் கடந்த இரண்டு நாட்களாக வழங்கப்படவில்லை என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இன்று (22.04.2022) தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு மாநில மின் பகிர்தளிப்பு மையம், சென்னை மின் கட்டுபாட்டு மையம் மற்றும் 24 மணி நேர நுகர்வோர் மின் சேவை மையம் மின்னகம் ஆகியவற்றை மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. வி செந்தில்பாலாஜி அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக் கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு. ராஜேஷ் லக்கானி, இ.ஆ.ப., மேலாண்மை இயக்குநர் திரு. எஸ். சண்முகம், இயக்குநர்கள், தலைமை பொறியாளர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் இருந்தனர். பின்னர், மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியதாவது:- இதுவரை தமிழகத்தில் இல்லாத ஒரு நிகழ்வாக கடந்த 29.03.2022 அன்று உச்சபட்ச மின்நுகர்வோர் 17,196 மெகா வாட் அளவிற்க்கு தேவை ஏற்பட்டது. மின்சார வாரியம் முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளின் படி 17,196 மெகா வாட் நுகர்பவு முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டது. கடந்த ஆண்டுகளைப் போல் இந்த ஆண்டு கோடை காலங்களில் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி இருந்தார்கள். அதன்படி, ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கான கூடுதலாகத் தேவைப்படுகின்ற 3,000 மெகாவாட் மின்சாரத்திற்கு டெண்டர் முறையில் கொள்முதல் செய்து மின்சாரம் பெறப்பட்டு விநியோகம் செய்யப்பட்டுவருகிறது. நம்முடைய அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி முழுவதுமாக கிடைக்கப்பெறவில்லை. நமக்கு நாளொன்றுக்கு 72,000 டன் நிலக்கரி தேவைப்படுகிறது. ஆனால், 47,000 டன் முதல் 50,000 டன் வரை தான் நமக்கு நிலக்கரிகள் வந்து கொண்டியிருக்கிறன. எனவே, தமிழகத்திற்கு தேவையான அளவிற்கு நிலக்கரியை முழுவதுமாக வழங்க வேண்டுமென்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். இதுபோல ஒரு நாளைக்கு 22 ரேக் நிலக்கரி கொண்டுவருவதற்கான ஒதுக்கீடு செய்வதற்கு பதிலாக ஒரு நாளைக்கு 14 ரேக் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுகிறது.எனவே, நிலக்கரிகள் இந்தாலும்கூட அதை கொண்டுவருவதற்கான ரேக்குகள் ஒதுக்கீடுகள் இல்லை. என்ற நிலையில், 22 ரேக்குகளையும் ஒதுக்கீடு செய்யப்பட்ட வேண்டும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களிடம் நேரில் வலியுறுத்தினார். மேலும், மாண்புமிகு தமிழக முதலச்சர் அவர்கள் மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களுக்கு கடிதமும் எழுதியிருக்கிறார்கள். நமக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு இல்லாத சூழ்நிலையிலும் கூட மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளன. வெளி நாடுகளில் நிலக்கரியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என அனைவருக்கும் அறிந்தது, இருந்தாலும்கூட இந்த ஓராண்டில் நாம் வந்த இறக்குமதி நிலக்கரி செய்யப்படவில்லை, விலை உயர்வின் காரணமாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தேவையான நிலக்கரியின் பற்றாக்குறையைப் போக்குவதற்காக 2 மாதங்களுக்கு மட்டும் கணக்கெடுக்கப்பட்டு 4,80,000 டன் டெண்டர் போடப்பட்டு அதற்கு நான்கு நிறுவனங்கள் பங்கு பெற்று 137 டாலர் அளவிற்கு உறுதி செய்யப்பட்டது. அந்நிறுவனங்களுக்கு உத்தரவுகள் வழங்கப்பட்டு விரையில் அந்த நிலக்கரியை நாம் பெற்று உற்பத்திக்கு பயன்படுத்த இருக்கிறோம். இரண்டு தினங்களுக்கு முன்பாக இரவில் ஏற்பட்டு மின் விநியோகத்தின் நிறுத்தம் 796 மெகாவாட், நமக்கு மத்திய தொகுப்பிலிருந்து நாம் பெறவில்லை இருந்தாலும்கூட போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் உத்தரவு அது தடைப்பட்ட போது நள்ளிரவிலும் முதலமைச்சர் கண்காணித்து பல்வேறு உத்தரவுகளை வழங்கினார்கள். இரவாக இருந்தாலும் சரி, எந்த நேரத்திலும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சீரான மின் விநியோக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வழிகாட்டினார்கள். ஓராண்டிற்குள் 22,000 புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன, 8,905 மின்மாற்றி அமைக்கும் பணியை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். 2,200 கோடி அளவிற்கு வட்டி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கை காரணமாக சேமிப்பு உருவாக்கப்பட்டிருக்கின்றன. மின்னகாத்தை பொறுத்த வரை இதுவரை 77,500 புகார்கள் வந்து இருக்கிறது எறக்குறைய 99 சதவீத எட்டப்பட்டு இருக்கின்றன. மக்கள் அரசின் மீது நாம்பிக்கை வைத்து, மின்னகாத்தை தொடர்பு கொண்டால் தீர்வுகள் கிடைக்கும் என்ற நாம்பிக்கையோடு அதற்கான தீர்வுகளை பெற்று இருக்கின்றார்கள. இந்திய முழுவாதும் இந்த பாதிப்பு எற்பட்டு மின் வெட்டுக்கள் அறிவிக்கபப்ட்டு நடைமுறை உரிய இந்த காலகட்டங்களில் மாண்புமிகு முதலமைச்சர் எடுத்த முன்னெச்ரிக்கை நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் மின் வெட்டே இல்லை என்ற நிலையில் சீரன மின் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த இரண்டு நாட்கள் எற்பட்ட Nழலுக்கு காரணட் மத்திய தொகுப்பில் கிடைக்க வேண்டிய மின்சாரத்தில் தடை ஏற்பட்ட காரணம்தான், அதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன, இன்னும் பல நிறுவணங்கலிருந்து 2 நாட்களுக்குள்ளக கூடுதல் மின்உற்பத்திற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளபப்ட்டு இருக்கின்றான. 2016ல் இருந்து 2020 வரை 68 முறை இது போன்ற ஒரு Nழல் எற்பட்டுள்ளது. இந்த 68 முறையும் எந்தெந்த தேதிகளில் எற்பட்டது என்ற விவரம் என்னிடம் உள்ளது. 2016ல் 5 முறையும், 2017ல் 13 முறையும், 2018ல் 16 முறையும், 2019ல் 9 முறையும், 2020ல் 8 முறையும் பின்னர் 17 முறையும் இதுபோன்ற Nழல் எற்பட்டுள்ளது. அந்த கால கட்டங்களில் நிலக்கரி பற்றாக்குறை இல்லை, அதேபோல் ரேக் ஒதிக்கிட்டிலும் குறைந்ததாக இல்லை. அனல் மின் நிலைய உற்பத்தி 15,553 மின்லியன் யூனிட் என்பது 2020ல் 20,300 மின்லியன் யூனிட்டாக உயர்தத்ப்பட்டு எறத்தாழ 4,800 மின்லியன் யூனிட் 31 விழுக்காடு அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 2020-2021அஆம் ஆண்டைவிட 2021-2022 ஆம் ஆண்டில் அனல் மின் நிலையங்களின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. சோலார் உற்பத்தியை பொறத்தவரை தமமிழகம் 4-வது இடத்தில் உள்ளது. 10 ஆண்டுகளில் தமிகத்தில் 20,000 மேகாவாட் அளவிற்க்கு மின் உற்பத்தி அதிகரிக்கப்படும். கடந்த ஆண்டு 4.000 மெகவாட் உற்பத்தி செய்ய திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு பரிசீலனையில் உள்ளது இவ்வாறு மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பேசினார்….