மத்திய கூட்டுறவு வங்கி பொது பேரவை கூட்டம்

தர்மபுரி, செப்.25: தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 58வது பொது பேரவை கூட்டம், தர்மபுரியில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் மற்றும் இணை பதிவாளர் மலர்விழி தலைமை வகித்து பேசினார். கூட்டத்தில், அதிகாரிகள் பேசுகையில், கடந்த 2023-24ம் ஆண்டில் தர்மபுரி மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கியின் நிகர லாபம் ₹16கோடியே 60 லட்சத்து 30ஆயிரத்து 106 லாபம் ஈட்டி உள்ளது என்றனர். இதில் பல்வேறு தீர்மானங்கள் குறித்தும் பேசப்பட்டது. இதில், பொது மேலாளர் கருணாகரன், முதன்மை வருவாய் அலுவலர் பிரேம் மற்றும் உதவி பொது மேலாளர்கள், உறுப்பினர் சங்க உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

தீவிர காய்ச்சலால் அவதி புதுவை அமைச்சர் நமச்சிவாயம் மருத்துவமனையில் திடீர் அனுமதி

கள்ளக்குறிச்சி மதி வழக்கு விசாரணை 8ம் தேதிக்கு ஒத்திவைப்பு நீதிபதி உத்தரவு

தூண்டில் வளைவு அமைக்கக்கோரி காலாப்பட்டு இசிஆரில் மீனவர்கள் திடீர் மறியல் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு