மது விற்ற 2 பேர் கைது

ஸ்பிக்நகர், அக். 31: முத்தையாபுரம் எஸ்ஐக்கள் அல்லிஅரசன் மற்றும் சுந்தர் தலைமையிலான போலீசார், முத்தையாபுரம் மற்றும் முள்ளக்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முத்தையாபுரம் பகுதியில் தங்கம்மாள்புரத்தை சேர்ந்த செந்தில்நாதபூபதி(40), முள்ளக்காட்டில் நேசமணி நகர் செல்வம் மகன் முகேஷ்(23) ஆகியோர் மதுபாட்டில்கள் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், இவர்களிடம் இருந்து மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

Related posts

பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில்

முன்னாள் துணை கலெக்டர் மயங்கி விழுந்து சாவு வேலூர் கலெக்டர் அலுவலகத்தில்

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றினால் இடமாற்றம் பட்டியல் தயாரிக்க உத்தரவு பள்ளிக்கல்வித்துறையில்