பாப்பிரெட்டிப்பட்டி, மார்ச் 6: பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மஞ்சவாடி கிராமத்தில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு சிலர் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் சிவகாமி(37) என்பவரது வீட்டில் சோதனை நடத்தி, அவரது வீட்டில் இருந்த 40 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதேபோல் கோபிநாதம்பட்டி போலீசார் வடகரை மற்றும் தென்கரைக்கோட்டை பகுதியில் ரோந்து சென்ற போது, வடகரை ஆற்றங்கரையோரம் சாக்கு மூட்டை எடுத்து வந்தவரை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் வடகரையை சேர்ந்த சம்பத்(63) என்பவர் மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரிந்து அவரை கைது செய்து, அவரிடமிருந்த 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதேபோல் தென்கரைக்கோட்டை பகுதியில் ஹரி ராமன் (60) என்பவரிடம் இருந்து 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மதுபானம் பதுக்கி விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்பட 3 பேரை கைது செய்த ேபாலீசார் 80 மதுபட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மது பதுக்கி விற்ற 3 பேர் கைது
previous post